இத்திருக்கோவிலின் திருவிழா ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று காப்புக்கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கும். 13ஆம் நாள் திருவிழாவில் தெருவடைச்சான், காத்தவராயன்-ஆரியமலை திருக்கல்யாணம், முத்துப்பல்லக்கு, தேர் வீதியுலா மற்றும் முக்கிய உற்சவமான பதினோராம் நாள் அன்று தீமிதி உற்ச்சவம் நடைபெறும். இதனை தொடர்ந்து மஞ்சள் நீர் விளையாட்டு, விடையாற்றியுடன் திருவிழா நிறைவுபெரும். திருவிழாவில் தீமிதி உற்ச்சவம் சிறப்புவாய்ந்தது. அன்றைய நாளில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையுடம் தொடங்கும்.

